Thursday 2nd of May 2024 01:49:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
திலீபன் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது!

திலீபன் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது!


தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கான தடை உத்தரவை உறுதிப்படுத்தி யாழ்.நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நினைவேந்தலை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருபது அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட வழக்குத் தாக்கலுக்கு அமைய ஏற்கனவே யாழ்.நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதனை பரிசீலனை செய்யுமாறு மேற்கொள்ளப்பட்ட மனு மீதான விசாரணையின் அடிப்படையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து மேற்கொண்டுவருகின்ற சந்திப்பின் தொடராக குறித்த தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய நினைவேந்தலுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறு தினம் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த நிலையில் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE